தமிழ் சினிமாவில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இந்த படத்திற்கு பிறகு தமிழில் முத்து, அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த சரத்பாபு செப்ஸிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரத்பாபு காலமானார்.

இவருக்கு தற்போது வயது 72. இந்நிலையில் நடிகர் சரத்பாபு மற்றும் மறைந்த பழம்பெரும் நடிகர் நம்பியாருக்கு இடையே இருக்கும் உறவு குறித்து ஒரு தகவல் தற்போது வந்துள்ளது. அதாவது நடிகர் சரத்பாபு நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். மேலும் நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிறகு அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி வருவதால் இவர் நம்பியாரின் மருமகனா என கேட்டு ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர் ‌