தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் துபாய்க்கு சென்றிருந்தபோது ஃபர்கான் என்பவருடன் மஞ்சள் நிற உடையில் போட்டோ எடுத்து புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவிய நிலையில் துபாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஃபர்கானை நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில் திருமணம் குறித்த தகவல்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய நண்பர். அவர் என்னுடைய வருங்கால கணவர் கிடையாது. என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன். நேரம் வரும்போது என்னுடைய வாழ்க்கையின் உண்மையான மர்ம மனிதன் யார் என்ற தகவலை நான் வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் மற்றும் பர்கான் காதலிப்பதாக வெளிவந்த தகவல்கள் வதந்தி என்பது தெரியவந்தது.
Hahaha!! Didn’t have to pull my dear friend, this time!
I will reveal the actual mystery man whenever I have to 😉
Take a chill pill until then!PS : Not once got it right 😄 https://t.co/wimFf7hrtU
— Keerthy Suresh (@KeerthyOfficial) May 22, 2023