கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் சுகாதார பணியாளர்களும், நகராட்சி பணியாளர்களும் இணைந்து நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி துருகம் சாலை, அண்ணாமலை அப்பார்ட்மெண்ட், அபிராமி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.