திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசவபுரம் பகுதியில் சாய் கிரண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். தினமும் சுகன்யா நடை பயிற்சி மேற்கொள்வார். நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து சுகன்யாவை ஓட ஓட விரட்டி கடித்தது.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தெரு நாய்களை விரட்டி அடித்தனர். பின்னர் படுகாயமடைந்த சுகன்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.