சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 20 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.