சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்ட உதவியாளர் தற்காலிக பணிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தொடர்பு திறன் தகுதி பெற்றிருக்க வேண்டும் என அறிவித்தது. ஆனால் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் தமிழகத்தில் இந்தி மொழித்திணிப்பை விட வேண்டும் என தமிழ் மொழி ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் திட்ட உதவியாளர் தகுதி பணிக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளில் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தமிழ் மொழி ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.