திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாசர் சென்று இருந்தார். அப்போது அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரும்படி அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் நாற்காலி எடுத்து வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல்லை எடுத்து வீசி ஆவேசமாக திட்டியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திமுக அமைச்சர் நாசரின் செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் அமைச்சர் ரவுடி போல் செயல்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக உள்ளது. தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றி, சட்ட ஒழுங்கை திமுக அரசு சீரழித்து வருவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.