திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாசர் சென்று இருந்தார். அப்போது அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரும்படி அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் நாற்காலி எடுத்து வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல்லை எடுத்து வீசி ஆவேசமாக திட்டியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் நாசர் கட்சித் தொண்டரை கல்லைக் கொண்டு அடித்தது குறித்து பேசிய ஜெயக்குமார், திமுக கற்காலத்துக்கு சென்று விட்டதாக விமர்சித்தார். மேலும் கழிவுநீர் கால்வாய் அருகே படுத்து போனில் பேசுவது போல் ஹலோ, ஹலோ என பேசியது நாசர் தான். திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது, அவ்வளவு செய்கிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார்.