தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து ஏப்ரல் 21-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.

இந்த முகாமில் வேலை தேடும் இளைஞர்களும் வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்வதற்கு கட்டணம் கிடையாது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலையளிக்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் வேலை பெற விரும்புபவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த வேலை வாய்ப்பு முகாம் ஏப்ரல் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முடித்தவர்கள், 10-ம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐஐடி, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை வழங்க இருக்கிறது.