காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தினார். இந்த பாதயாத்திரையின் போது ராகுல் காந்தி தனது தலை முடியை வெட்டாமலும், தாடியை சேவ் செய்யாமலும் நடை பயணம் மேற்கொண்டு இருந்தார். அதன் பின் நடைபெற்ற நாடாளுமன்ற  காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் ராகுல் காந்தி தாடியை சேவ் செய்யாமல் யாத்திரையின் போது இருந்த தோற்றத்திலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி புது லுக்கிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தான் படித்த பல்கலைக்கழகமான இங்கிலாந்து தலைநகர் லண்டன் கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி நாளை “21 ஆம் நூற்றாண்டை கேட்க கற்றுக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் அவர் விரிவுரை ஆற்ற இருக்கின்றார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்களை ராகுல் காந்தி சந்திக்க இருக்கின்றார்.