மத்தியப்பிரதேசம் மாநில சட்டமன்றத்துக்கு நடப்பு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்ற 2003-ம் வருடத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியானது இருந்தது. எனினும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு மீண்டும் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க தற்போதே தயராகி வருகிறது.

இந்நிலையில் 2023-2024ம் வருடத்திற்கான ரூபாய்.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதம் இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது மத்தியப்பிரதேச அரசு. நிதிமந்ஹ்டிரி ஜகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் வருடத்திற்கான ரூ.3.14 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் பட்ஜெட்டில் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாமத்தியபிரதேசம்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!! திட்டத்துக்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசானது முன்மொழிந்துள்ளது. முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும்.

ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்க பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரான பைகா, பரியா மற்றும் சஹாரியா குடும்பங்களை சேர்ந்த பெண்களின் வங்கிக்கணக்கில் ஆதார் அனுதய யோஜனாவின் கீழ் ரூபாய்.1000 டெபாசிட் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூபாய்.1000 அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.