நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

யு பி ஐ QR  குறியீட்டு ஊழல் குறித்து SBI கூறுவதாவது, OLX, Epay  போன்ற ஆன்லைன் வலைதளங்களில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய விளையும் நபர்களை இந்த மோசடி நபர்கள் இலக்காக கொண்டுள்ளனர். அவர்கள் கேட்டிருக்கும் விலையின்படி, அந்த பொருளை வாங்க சம்மதித்து பொருளை விற்கும் நபர்களை அந்த மோசடி நபர்கள் மொபைலில் தொடர்பு கொண்டு அழைக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபரின் நம்பிக்கையை பெறுவதற்காக அந்த மோசடியாளர் ஒரு குறைந்தபட்ச தொகையை முதலில் அனுப்புகிறார். அதன் பிறகு மீதமுள்ள பணத்தை பெறுவதற்காக QR  குறியீட்டை அனுப்புகிறார். இந்த மோசடி பற்றி அறிந்திராத அந்த பாதிக்கப்பட்ட நபர் பணத்தை தான் பெறுவோம் என நினைத்து, அந்த QR  குறியீட்டினை ஸ்கேன் செய்து UPI ரகசிய  எண்ணை சமர்ப்பிக்கிறார்.

ஆனால், அதற்கு மாறாக அவர்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் QR  குறியீட்டினை ஸ்கேன் செய்து UPI  ரகசிய எண்ணை சமர்ப்பித்த உடனே கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் பணம் செலுத்துவதற்கு மட்டுமே QR  குறியீடு ஸ்கேன் செய்யப்படுகிறது பணம் பெறுவதற்கு அல்ல என SBI அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf