பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தியாகராய நகரில் மே 17 இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதேப்போன்று பல்வேறு இடங்களில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.