பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அம்பாசமுத்திரம் தாலுக்கா பகுதியை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் அப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.