தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸை முன்னிட்டு தற்போது இருந்தே படக்குழு ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குந்தவை பாத்திரத்திற்காக எடுக்கப்பட்ட நடிகை திரிஷாவின் போட்டோ சூட் வீடியோவை தற்போது லைகா நிறுவனம் பகிர்ந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவரும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதனால் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.