கடலூர் மாவட்டத்தில் உள்ள மோவூர் அக்ரஹார தெருவில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று தீபராஜ் சம்பந்தப்பட்ட இடத்தை மண்வெட்டியால் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏன் இந்த இடத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாய்? என மல்லிகா கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த தேவராஜ் தனது பெரியம்மாவின் தலையில் மண்வெட்டியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீபராஜாவை கைது செய்தனர்.