கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் இவர்களுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான மருது பாண்டியனுடன் தனது மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். பின்னர் சான்றிதழை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது துறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது கடலூர் நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மருதுபாண்டி, ஐயப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திட்டக்கூடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.