சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கன்னியப்பன் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பரப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் செல்போன் செயலி மூலம் 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கன்னியப்பன் கடனை செலுத்தாமல் இருந்தார்.

இதனால் செயலி நிறுவனத்தின் ஊழியர்கள் கன்னியப்பனை மிரட்டி வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கன்னியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.