திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகசுந்தரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே தங்கி வேலை பார்க்கும் சுரேஷ் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவதாக தெரிகிறது.

மேலும் வீட்டு செலவுகளுக்கு சுரேஷ் சரியாக பணம் கொடுக்காததால் முருகசுந்தரி சுய உதவி குழுவில் அதிக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஊருக்கு வந்த சுரேஷிடம் முருகசுந்தரி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த முருகசுந்தரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.