கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர் 2-வது கிராஸ் பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இருந்து விட்டார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க மனைவி இல்லை என்ற மன உளைச்சலிலும் இருந்த ராமலிங்கம் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்றுவிட்டு, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராமலிங்கத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.