சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காவியா(24) பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்துவிட்டு அன்னூர்-கோவை ரோட்டில் இருக்கும் என்.எம் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் காவியா தங்கி இருந்தார். இன்னலையில் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் பிரசவ விடுதியில் காவியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கூறியதாவது, கடந்த 7 மாதமாக காவியா அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக யாரிடமும் காவியா சரியாக பேசாமல் இருந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளனர்.