கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் உமர் நகரில் வாடகை ஆட்டோ தொடர்பாக தனியார் சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மையத்திற்கு இலவச எண்ணும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 எண்களில் இருந்து சேவை மைய இலவச எண்ணுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது. அங்கு வேலை பார்க்கும் பெண்கள் அழைப்புகளை எடுத்து பேசும்போது மறுமுனையில் பேசுபவர்கள் சரியாக பேசுவதில்லை.

கடந்த 30-ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை இலவச எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி, புகைப்படங்கள் வந்ததை பார்த்து அங்கு வேலை பார்க்கும் இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.