கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரமணி(32) டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று சீ.கீரனூரில் இருக்கும் கட்டிடத்தில் எந்திரம் மூலம் டைல்ஸ் பதிக்கும் பணியில் வீரமணி ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வீரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வீரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.