ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் 28 வயது பெரியப்பா முறை வாலிபர் திருமணம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் சிறுமியின் பெரியப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.