கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் பரமதாஸ்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பரமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பரமதாஸ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு பரமதாசை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.