கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்லஸ்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அட்லஸ் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மண்டைக்காடு புதூருக்கு செல்ல பேருந்துக்காக 22 வயதுடைய இளம்பெண் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அட்லஸ் அந்த பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டி கேட்ட இளம்பெண்ணை அட்லஸ் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அட்லசை கைது செய்தனர்.