ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாழக்கொம்பு புதூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதயகுமார்(21) பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக உதயகுமாரும் ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கதிர்வேலின் பெற்றோருடன் புதுமண தம்பதியை அனுப்பி வைத்தனர்.