கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாலன்விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரசல்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்த சென்ற 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு இழுத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது என ரசல் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரசலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.