கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணியூர்கோணம் நாரகத்து விளை பகுதியில் ஹரீந்தரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு தீபகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஹரேந்திரன் குலசேகரம் அரசமூடு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஜெப சாமுவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஹரீந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஹரீந்திரன் மற்றும் ஜெப சாமுவேல் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரீந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.