தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டியானுர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சாலம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சாலம்மாள் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.