கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். இந்நிலையில் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கௌதமன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌதமனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.