கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாலிபர்கள் இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய நடன குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருக்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு அனைவரும் ஒரு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சதீஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

நேற்று காலை வெள்ளமடம் லாயம் விலக்கு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இமானுவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அஜித், டிரைவர் சதீஷ், கண்ணன், சிஞ்சு ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்