ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான் ஈரோட்டில் இருக்கும் ஒரு திருமண தகவல் மையத்திற்கு சென்றேன்.

அதன் உரிமையாளர்களான ஈரோட்டை சேர்ந்த தம்பதியினர் எங்களுக்கு உயர் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அவர்களிடம் கடந்த 2019-ஆம் ஆண்டு இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை . எனவே மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.