தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒசஅள்ளி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினரான பூவேந்திரன் என்பவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது வசந்தா கிணற்றில் மிதந்தவாறு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக பூவேந்திரன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வசந்தாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு வசந்தாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து வசந்தா இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.