திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து அதனை புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த சத்திய கீதன், கணேஷ் முத்தையா ஆகியோரிடம் 7 கார்களை புதுப்பிப்பதற்காக கொடுத்துள்ளார். அவர்கள் பழைய கார்களுக்கு பொருத்த உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வெங்கடேஷிடம் 50 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர்.

ஆனால் உதிரி பாகங்கள் வாங்காமலும், கார்களை புதுப்பித்துக் கொடுக்காமலும் மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சத்திய கீதன், கணேஷ் முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.