விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாண்டியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் ராஜி தனது இரண்டு மகள்களுடன் தந்தை பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். வழக்கமாக ராஜி வேலைக்கு ஆட்டோவில் சென்று வருவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆட்டோவை தவறவிட்ட ராஜி குறுக்குப் பாதை வழியாக வேலைக்கு செல்வதாக கூறினார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ராஜி வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அதனை யாரும் எடுத்து பேசவில்லை. மறுநாள் சுவிட்ச் ஆப் என வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஓடையில் ராஜி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் முருகேசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மர்மமான முறையில் தனது மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ராஜி எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.