கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் லட்சுமி நகரில் வசந்த ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வைஜெயந்தி மாலா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வசந்த ராஜன் தனது தாய் ராபிரா, தந்தை காதர் ஆகியோருடன் இணைந்து தங்கள் வீட்டு கடனை அடைக்க உனது பெற்றோரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வாங்கி வா என கேட்டு வைஜெயந்தி மாலாவை திட்டி, தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். இதுகுறித்து வைஜெயந்தி மாலா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வசந்த ராஜன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.