சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த விமானம், தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் வந்த விமானம், ஜோத்பூரில் இருந்து 124 பயணிகளுடன் வந்த விமானம் என மொத்தம் 5 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரம் வட்டமடித்தது. இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 5 விமானங்களும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதே போல் பிற நகரங்களுக்கு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.