தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் இடுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் வைத்து இடுமன் மயங்கி விழுந்துவிட்டார். மயக்க ஊசி போட்டு கொண்டதால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக இடுமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இடுமன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.