கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே இருக்கும் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனது செல்போனில் கேம் வைத்து தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.