கடலூர் மாவட்டத்தில் உள்ள வி.பெத்தாங்குப்பத்தில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயசூர்யாவுக்கு, பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதனால் காயமடைந்த வள்ளி, ஞான சௌந்தரி ஆகிய இரண்டு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பழனிவேல், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.