தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மான் கறி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 10 பேரை சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து மான்கறியை வாங்கி வந்து சமைத்ததாக கூறியுள்ளனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மான் கறி விற்பனை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.