தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி அண்ணா நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த வேலையில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா(13) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சுபாவின் தலைப்பகுதி எந்திரத்தில் சிக்கி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.