பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் ரோடு சாமியப்பா நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒரு பெண் உள்ளிட்ட சிலர் அறக்கட்டளை நடத்துவதாக தெரிவித்தனர். அதில் வட்டி இல்லா கடன் வழங்குவதாக கூறியுள்ளனர். அதற்கு முன்பணமாக பெண்களிடம் இருந்து பணம் வாங்கியுள்ளனர்.

ஆனால் கடன் வழங்கவில்லை. கொடுத்த முன் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து அந்த பெண்ணிடம் நேரில் கேட்ட போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தற்போது அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.