பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அடுத்த வாரம் திருவிழா நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். அந்த கோவிலுக்கு அருகே குடியிருக்கும் கந்தசாமி என்பவர் திருவிழாவின் போது தனது வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடிக்க கூடாது எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது விழா குழுவினர் திருவிழாவின் போது பட்டாசு வெடிக்க கூடாது என ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாய்? நீ கோவிலுக்கு வர மாட்டாயா? என கேட்டுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.