தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொல்ல அள்ளி பகுதியில் முத்தழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டு என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாக தெரிகிறது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.