வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இடுப்பாடுகளில் சிக்கி ராணி, பாலசுப்பிரமணியம் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பக்தர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.