கடலூர் மாவட்டத்தில் உள்ள அதியமான் குப்பம் முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது கொலை செய்து உடலை மரத்தில் தொங்கவிட்டு சென்றார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.