கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் மணிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தார் பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவிற்காக மணிதாஸ் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மணிதாஸ் காயமடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மணிதாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.