சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் அங்கு வந்து மாதேசிடம் தகராறு செய்துள்ளார். மேலும் வெங்கடேஷ் மாதேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மாதேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசை கைது செய்தனர்.